top of page
Writer's picturekvnaveen834

Updated: Sep 29, 2023

மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?

( எசேக்கியேல் 14 : 3 )

Son of man, these men have set up their idols in their heart, and put the stumblingblock of their iniquity before their face: should I be enquired of at all by them?

( Ezekiel 14 : 3 )

தேவ நாமம் மகிமைப்படுவதாக.

ஒரு சிறு சிந்தனை தேவனோடு சேர்ந்து சிந்திப்போம்.

மேலே மேற்கோள் காட்டப்பட்ட வேதவசனம், தேவன் இஸ்ரவேல் புத்திரரிடம் அவர்கள் தொடர்பாக பேசுவதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவப்பிள்ளைகளிடம் பேசுவது.

தேவன் சொல்வது தன்னுடைய ஜனங்கள் இருதயத்தில் வைத்திருக்கும் விக்கிரகங்களை குறித்துதான்.

இங்கே விக்கிரகம் என்று தேவன் குறிப்பிடுவது என்ன?

நீங்களும் நானும் எதற்கு இதயத்தில் முதலிடம் கொடுக்கிறோம்? தேவனுக்கா அல்லது நாம் சம்பந்தப்பட்ட அழிந்துப் போகக்கூடிய உலக காரியங்களுக்கா?

தேவன் மற்றும் தேவனுடைய ராஜ்யத்தை விட்டு விட்டு, உலக சிந்தனைகளையும் உலகில் உள்ள விஷயங்களையும் தேவன் விக்கிரகங்களாகக் கருதுகிறார்.

அதாவது நாளை பற்றிய கவலைகள்,

பொருள் உடைமைகள் பற்றிய எண்ணங்கள் மற்றும் அவற்றின் உரிமைகோரல், செல்வத்தின் மீதான ஆசை மற்றும் ஆவேசம்,

உறவினர்கள், மனைவி மற்றும் கணவன் பற்றி கவலை, குழந்தைகளைப் பற்றிய கவலைகள், மாமிச இச்சைகள் போன்றவை தேவனின் பார்வையில் விக்கிரகங்கள்.

தேவனுக்கு முதலிடம் கொடுக்காமல் இவற்றை முதன்மைப்படுத்துபவர்களின் அழுகைகளையும் ஜெபங்களையும் கர்த்தர் கேட்டு ஏற்றுக்கொள்கிறதில்லை

என்றே எசேக்கியேல் 14:3 கூறுகிறது.

ஆகவே, அன்பான தேவ பிள்ளைகளே, கர்த்தருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து, தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் தேடுவோம். அப்போது நமது பரலோகத் தந்தையின் கரங்கள் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நமக்குத் தரும்.

தேவன் உண்மையுள்ளவர்.

இந்த தெய்வீக ஆலோசனையின்படி, கர்த்தர் கொடுத்த இந்த பூமியில் கர்த்தர் கொடுத்த வாழ்க்கையை வாழலாம்.

தேவனுடைய நாமத்துக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் 🙏🏼


Written by-✍✍✍✍✍✍✍✍✍✍✍

Bro Vishwanath Divakaran


Translation by '✍✍✍✍✍✍✍✍✍✍✍

Sis Tephila Mathew

40 views0 comments
Writer's picturekvnaveen834

പ്രോത്സാഹന ചിന്തകൾ 😁

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•

നെഹമ്യാവിന്റെ പ്രാർത്ഥനാ ജീവിതത്തിൽ നിന്നും ചില പാഠങ്ങൾ

( വേദ പുസ്തക ഭാഗങ്ങൾ : നെഹമ്യാവ് 1, 2, 5, 6 അധ്യായങ്ങൾ )

നെഹമ്യാവ് എന്ന വ്യക്തിത്വത്തിന്റെ പ്രാർത്ഥന ജീവിതത്തിൽ നിന്നും വളരെ മൂല്യവത്തായ പാഠങ്ങൾ നമുക്ക് ഉൾക്കൊള്ളുവാനായി സാധിക്കും.

★ * മുൻതൂക്കം നൽകുന്നു

*

രാജാവിന്റെ പാനപാത്രവാഹകൻ എന്ന നിലയിൽ വളരെ ഭാരിച്ച ഉത്തരവാദിത്വങ്ങൾ നിർവഹിക്കുന്നതിനിടയിലും നെഹമ്യാവ് തന്റെ പ്രാർത്ഥനയ്ക്ക് പ്രാധാന്യം കൊടുക്കുന്നു. യെരുശലേമിലെ വാതിലുകളുടെയും മതിലുകളുടെയും അവസ്ഥയെയും യഹൂദന്മാരുടെ കഷ്ടതയും കുറിച്ച് അദ്ദേഹം കേട്ടപ്പോൾ വളരെ ദിവസങ്ങളോളം പ്രാർത്ഥിക്കുവാനും ഉപവസിക്കുവാനും ഇടയായി തീർന്നു (1:3) അദ്ദേഹം രാവും പകലും പ്രാർത്ഥിച്ചു എന്ന് നമുക്ക് വായിക്കുവാനായി സാധിക്കുന്നു (1:6). ദാനീയേലിന്റെ ജീവിതത്തിലും ഇത്തരത്തിൽ സമാനമായുള്ള ഒരു സമർപ്പണ ജീവിതം നമുക്ക് വീക്ഷിക്കുവാനായി സാധിക്കും. തിരക്കേറിയ നമ്മുടെ ദൈനംദിന ജീവിതത്തിനിടയിലും നാം ആത്മീക വിഷയങ്ങൾക്കും പ്രാർത്ഥനക്കും ദൈവവചന ധ്യാനത്തിനും സമയം കണ്ടെത്തുന്നു എന്ന് നമ്മിൽ തന്നെ പരിശോധിച്ചു ഉറപ്പുവരുത്തേണ്ടതുണ്ട്

★ * ദൈവത്തെ സ്തുതിക്കുന്നു

*

നെഹമ്യാവിന്റെ പ്രാർത്ഥനകൾ ദൈവത്തിന്റെ മാഹാത്മ്യത്തെ സ്തുതിക്കുന്നതും അവിടുന്നിന്റെ പ്രവർത്തികളിൽ നന്ദി അർപ്പിക്കുന്നതും ആയിരുന്നു. ദൈവത്തെ നെഹമ്യാവ് 'സ്വർഗ്ഗത്തിലെ ദൈവം' എന്ന് വിശേഷിപ്പിക്കുകയും അവിടുന്നിന്റെ ഭയങ്കരത്വത്തെ അംഗീകരിക്കുകയും ചെയ്യുന്നു(1:5).

വ്യക്തിപരമായ അപേക്ഷകൾക്കും യാചനകൾക്കും അപ്പുറം നമ്മുടെ പ്രാർത്ഥനകൾ ദൈവത്തോടുള്ള സ്തുതിയും സ്തോത്രവും നന്ദിയും നിറഞ്ഞവ ആയിരിക്കണം .

★ * വ്യക്തിഗതമാക്കുന്നു

*

ഇസ്രായേൽ മക്കളുടെ പാപങ്ങളെ നെഹമ്യാവ് പ്രതിനിധാനം ചെയ്യുന്നതായി നാം കാണുന്നു. മറ്റുള്ളവരുടെ മേൽ കുറ്റം ആരോപിക്കാതെ അത് അദ്ദേഹത്തിന്റെയും അദ്ദേഹത്തിന്റെ പിതൃ ഭവനത്തിന്റെയും പാപം മുഖാന്തരമാണെന്ന് സമ്മതിക്കുന്നു (1:6).

നാം മറ്റുള്ളവർക്ക് വേണ്ടി പ്രാർത്ഥിക്കുന്നതിന് മുൻപേ നമ്മുടെ പാപങ്ങളെ ഏറ്റുപറയും മാനസാന്തരപ്പെടുകയും ചെയ്യേണ്ടതുണ്ട്. അന്ധനായ ഒരുവന് ഒരിക്കലും മറ്റൊരു അന്ധനെ വഴി കാണിക്കുവാൻ സാധിക്കില്ല .

★ * ദൈവവചനത്തെ അറിയുക

*

ദൈവവചനത്തിൻമേലുള്ള നെഹമ്യാവിന്റെ പരിചിതത്വം അവരുടെ പാപങ്ങളെയും അനുസരണക്കേടിനെയും കുറിച്ച് മനസ്സിലാക്കുവാൻ മുഖാന്തരമായി(1:7). ദൈവത്തിങ്കലേക്ക് തിരിഞ്ഞാൽ അവിടുന്ന് തങ്ങളെ രക്ഷിക്കുമെന്ന് നെഹമ്യാവിന് ബോധ്യമായി (1:9). ദൈവിക ഹിതത്തെയും മുൻഗണനകളെയും വിവേചിച്ചറിയേണ്ടതിന് ദൈവവുമായി ഒരു അഗാധമായ ബന്ധം നാം സ്ഥാപിക്കേണ്ടതുണ്ട്.

★ * ഹ്രസ്വമായ പ്രാർത്ഥനകൾ

*

രാജാവിന് മുൻപിൽ തന്റെ ആവശ്യത്തെ അപേക്ഷിക്കുന്നതിനു മുൻപേ നെഹമ്യാവ് പ്രാർത്ഥിച്ചതായി നാം കാണുന്നു (2:4). ആ പ്രാർത്ഥന വളരെ സംക്ഷിപ്തവും ക്ലിപ്തവും ആയിരുന്നു . നമ്മുടെ ഹൃദയനിരൂപണങ്ങളെ ആരാന്നറിയുന്ന ദൈവം ഹ്രസ്വവും ആത്മാർത്ഥവുമായ നമ്മുടെ പ്രാർത്ഥനകളെ ശ്രദ്ധിച്ചു കേൾക്കുന്നു. മുങ്ങിത്താഴുമ്പോൾ സഹായത്തിനു വേണ്ടി അഭ്യർത്ഥിക്കുന്ന പത്രോസിന്റെ നിലവിളി, ക്രൂശിലെ കള്ളന്റെ പ്രാർത്ഥന, യബേസിന്റെ പ്രാർത്ഥന, ചുങ്കക്കാരന്റെ പ്രാർത്ഥന ഇവയെല്ലാം വളരെ ചുരുങ്ങിയ സമയം കൊണ്ടുള്ള പ്രാർത്ഥനകൾക്കുള്ള ഉദാഹരണങ്ങളാണ്.

കർമ്മ ഇടങ്ങളിലേക്ക് പ്രവേശിക്കുന്നതിന് മുൻപും, രോഗികളെ പരിശോധിക്കുന്നതിന് മുൻപും, ഒരു ആംബുലൻസ് കടന്നു പോകുന്നത് നിരീക്ഷിക്കുമ്പോഴും ഇത്തരത്തിലുള്ള പ്രാർത്ഥനകൾ നമുക്ക് നമ്മുടെ ദൈന്യംദിന ജീവിതത്തിൽ ശീലമാക്കാം .

★ * ഏതു സാഹചര്യത്തിന്റെ മധ്യത്തിലും പ്രാർത്ഥിക്കുക

*

സമ്പൽ എത്തും തോബിയാവും തനിക്കെതിരെ ഗൂഢാലോചന ചെയ്യുന്നതിന് മധ്യത്തിലും നെഹമ്യാവ് പ്രാർത്ഥിക്കുന്നു (5:9). ജനം അദ്ദേഹത്തെ ഭയപ്പെടുത്തുമ്പോഴും യെരുശലേമിലെ മതിലുകൾ പണിയുന്നതിൽ നിന്ന് നിരുത്സാഹപ്പെടുത്തുമ്പോഴും അദ്ദേഹം വീണ്ടും പ്രാർത്ഥിക്കുന്നതായി നാം കാണുന്നു(6:9).

നമ്മുടെ ജീവിതത്തിന്റെ ഏത് വൈഷ്യമ്യഘട്ടത്തിന്റെ നടുവിലും നാം ദൈവത്തോട് സഹായം അഭ്യർത്ഥിക്കുന്നവർ ആയിരിക്കണം .

* ഒരു സംക്ഷിപ്ത വീക്ഷണം

:*

¶ തിരക്കേറിയ ജീവിതത്തിന് നടുവിലും പ്രാർത്ഥിക്കുന്നതിനും ദൈവവചനം പഠിക്കുന്നതിനും സമയം കണ്ടെത്തുക.

¶ പ്രാർത്ഥനകളെ അപേക്ഷകളിൽ മാത്രം ഒതുക്കി നിർത്താതെ ദൈവത്തോടുള്ള നന്ദിയും സ്തുതിയും സ്തോത്രവും നിറഞ്ഞവ ആക്കി മാറ്റുക.

¶ മറ്റുള്ളവർക്ക് വേണ്ടി പ്രാർത്ഥിക്കുന്നതിനു മുൻപേ സ്വന്തം പാപങ്ങളെ ഏറ്റു പറയുക .

¶ ഹ്രസ്വമായ, ആത്മാർത്ഥമായ പ്രാർത്ഥനകൾ ഏത് സാഹചര്യത്തിലും ഉപകാരപ്പെടുന്നവയാണ് .

¶ ദൈവവുമായുള്ള അ കൈതവമായ ബന്ധത്തിലൂടെ ദൈവികഹിതത്തെ മനസ്സിലാക്കുക .

¶ ജീവിതത്തിന്റെ ഏത് അവസ്ഥയിലും ദൈവത്തിന്റെ സഹായത്തെ അഭ്യർത്ഥിക്കുക.

📖 ഈ ദിനത്തെ വേദഭാഗം 📖

ഫിലിപ്പിയർ 4:6

ഒന്നിനെക്കുറിച്ചും വിചാരപ്പെടരുത്: എല്ലാറ്റിലും പ്രാർത്ഥനയാലും അപേക്ഷയാലും നിങ്ങളുടെ ആവശ്യങ്ങൾ സ്തോത്രത്തോടു കൂടെ ദൈവത്തോട് അറിയിക്കുക വേണ്ടത്.

🙏🙏🙏🙏🙏🙏🙏


Written by ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

Sis Shincy Susan wayanad


Translation by ✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

Sis Acsah Nelson Ernakulam

36 views0 comments
Writer's picturekvnaveen834

ஒரு சிந்தை

விசுவாசம்

எபிரெ.11:1 "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. "

அன்பானவர்களே! மேலே சொன்னது போல் விசுவாசத்துக்கு ஒரு வரையறையை நாம் பார்க்கலாம். அதற்கு நம்மை வழிநடத்தும் விசுவாசத்தின் 5 படிகள் பின்வருமாறு.

1. நம்பிக்கையை இழக்காதீர்கள்.

2. அவிசுவாசத்தால் சந்தேகப்படாதீர்கள்.

3. விசுவாசத்தில் பலமாக இருங்கள்.

4. கர்த்தர் சக்தி வாய்ந்தவர் என்பதை முழுமையாக நம்புங்கள்.

5. தேவனுக்கு மகிமை கொடுங்கள்.

இதன் அடிப்படையில் ரோம. 4:19-22 பார்க்கவும். அங்கே ஆபிரகாமை விசுவாசத்திற்கு உதாரணமாகக் காணலாம். ஆபிரகாம் என்ன செய்தார்? இந்த 5 படிகள் அவரது வாழ்க்கையில் பின்பற்றப்பட்டன.

1. ரோம.4 : 19 -- "நம்பிக்கை தளரவில்லை"

அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். இங்கே "எண்ணாதிருந்தான்" என்ற வார்த்தைக்கு ஆழமான அர்த்தம் உள்ளது. இதனால் இருவரது உடல்களின் உயிரற்ற தன்மையை உணர்ந்தோ அல்லது புரிந்து கொண்டோ அவர் நம்பிக்கை இழக்கவில்லை (இன்றைய காலக்கட்டத்தின் படி சொன்னால் அவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மருத்துவ அறிவியலில் சாத்தியமில்லாத ஒன்று). அங்கே ஆபிரகாம் எல்லாவற்றையும் விட கர்த்தரின் வாக்குத்தத்தத்திலோ அல்லது விசுவாசத்திலோ தளரவில்லை.

2. ரோம.4 : 20 -- " அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல் "

இங்கே ஆபிரகாம் அவிசுவாசத்தின் மூலம் கர்த்தரின் வாக்குத்தத்தக்கத்தை சந்தேகிக்கவில்லை. அவருக்கும் சாராவுக்கும் வயது காரணமாக உடல் குறைபாடுகள் இருந்ததால், கடவுள் சொன்னது நடக்குமா என்று சந்தேகிக்கவில்லை.

3. ரோம.4 : 21 -- " தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி"

ஆபிரகாம், தேவன் வல்லமையுள்ளவர் என்று முழுமையாய் நம்பினார் என்று வாசிக்கிறோம் . ஆபிரகாம் கடவுளின் வல்லமையில், தம்முடைய எங்கும் நிறைந்திருப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார், மேலும் அவருடைய மற்றும் சாராளின் பலவீனம் எதுவாக இருந்தாலும், கர்த்தரின் சக்தி மேலோங்கும் மற்றும் தேவனால் கூடும் என்று அவர் தனது இதயத்தில் முற்றிலும் உறுதியாக இருந்தார்..

4. ரோம. 4: 21 -- " விசுவாசத்தில் வல்லவனானான்"

ஆபிரகாம் கர்த்தரின் வேலையைச் சந்தேகிக்காததால், கர்த்தர் மீதான விசுவாசத்தால் பலப்பட முடிந்தது.

5. ரோம. 4 : 21 -- " தேவனை மகிமை படுத்தி...".

ஆபிரகாம் விசுவாசத்தில் தளராமல், சந்தேகப்படாமல், பலப்படுத்தப்பட்டதால், அந்த உறுதியை அவன் இருதயத்தில் பெற்றான். அதன் மூலம் கர்த்தருக்கு மகிமை கொடுக்க நேர்ந்தது.

பிலிப்பி. 4 : 6 - " உங்கள் விண்ணப்பங்களை "ஸ்தோத்திரத்தோடே" கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள் "இங்கே பவுலும் தேவனுக்கு நன்றி செலுத்தவும் அல்லது மகிமைப்படுத்தவும் கூறுகிறார்..

1தெச 5 : 17,18 - " இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள் " இங்கே மீண்டும் பவுல் தேவனை மகிமைப்படுத்த அழைக்கிறார். விசுவாசம் இருந்தால் மட்டுமே சரியாக ஜெபிக்க முடியும். நாம் யாரிடம் ஜெபிக்கிறோமோ அந்த தேவன் நம்முடைய விஷயத்தில் செயல்பட முடியும் என்ற நல்ல விசுவாசம் நமக்கு இருந்தால் மட்டுமே, நாம் ஜெபித்தால் பிரயோஜனம் இருக்கும்.

இவ்வாறே இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு தேவைகளும் விருப்பங்களும் உள்ளன. நாம் நம் தேவனிடம் ஜெபிக்கும்போது, ​​அதைச் செய்வதற்கு என் கர்த்தர் போதுமானவர் என்று விசுவாசிக்கிறோமா? நம்முடைய ஜெபத்தின் விஷயத்தில் கர்த்தர் செயல்பட காத்திருக்கும்போது நாம் விசுவாசத்தில் தடுமாறுகிறோமா? நாம் தேவனை சந்தேகித்தோமா? சிறிது காலதாமதம் செய்தாலும் நம் தேவைகளை தேவன் நிறைவேற்ற வல்லவர் என்று அவரை நம்பி பலம் பெறுகிறோமா? தேவன் நம் விஷயத்தில் வேலை செய்கிறார் என்ற முழுமையான உறுதி நமக்கு இருக்கிறதா? அப்படியானால் அந்த உறுதியின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் தேவனுக்கு மகிமை கொடுக்க முடிகிறதா? தேவனே, நீர் என் பிரச்சினையில் செயல்படுவதால் நன்றி சொல்ல முடிகிறதா? அங்குதான் வேதம் சொல்கிறபடி நாம் ஆபிரகாமை முன்மாதிரியாகக் கொள்ளலாம். நம்முடைய காரியம் என்னவாகவும் இருக்கட்டும்! மனிதர்களின் பார்வையில், சூழ்நிலைக்கு ஏற்ப, உலக முறைப்படி, மருத்துவ அறிவியலில் எந்த வகையிலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறோமா? அப்படியானால் அன்பர்களே, வேதத்தின்படி, இந்த 5 படிகளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். அது நம்மால் முடியும் என்பதற்கு ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு உதாரணம். ஆபிரகாம் நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான். எனவே நமக்கும் இது சாத்தியமே. அப்படியானால் நாம் ஜெபிக்கிற விஷயத்தில் ஆண்டவர் நமக்கு பதில் தருவார் என்று விசுவாசத்தில் சோர்ந்து போகாமல், சந்தேகப்படாமல் விசுவாசித்து, பலவீனத்தில் தேவனுடைய பலத்தில் சக்தி பெற்றுக் கொண்டு, நம்முடைய காரியத்தில் தேவன் கிரியை செய்ய வல்லவர் என்று விசுவாசித்து, தேவன் கிரியை செய்கிறார் என்று ஸ்தோத்திரம் செய்து, தேவனை மகிமைப்படுத்தி ஜீவிக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக! விசுவாசத்தில் ஆபிரகாமின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம். சிருஷ்டி கர்த்தர் தனது படைப்பிலிருந்து அதைத்தான் விரும்புகிறார். அதற்கு தேவன் நம்மை பலப்படுத்துவாராக!

தேவ நாமம் மகிமைப்படுவதாக !! ஆமென்!!


Written by- 1✍✍✍✍✍✍✍

Sis Reny saji muscat


Translation by ✍✍✍✍✍✍✍✍

Sis Tephilla Mathew

27 views0 comments
bottom of page