top of page

சிந்தை

சங்கீதம் 68:19 “ நாள்தோறும் நம்முடைய பாரங்களைத் சுமக்கிற நம்முடைய இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.!"

அன்பர்களே, மேற்கண்ட வசனம் பாரங்களை சுமக்கும் தேவனைப் பற்றி பேசுகிறது. நம்மில் யாரேனும் தாங்க முடியாத அளவுக்கு அதிக பாரத்துடன் வாழ்கிறோமா? அப்போது நமக்கு ஒரு 'சுமைதாங்கி' தேவன் உண்டு. நம்முடைய சுமைகளைச் சுமக்க அவர் போதுமானவர்.

கர்த்தர் நம்மை வசனம் மூலம் அழைக்கிறார், மத்தேயு 11:28, "வருத்தப்பட்டுப் 'பாரஞ்சுமக்கிறவர்களே' நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்". இவ்வுலக வாழ்வில் வாழும் போது பலவிதமான சுமைகளை நாம் எதிர்கொள்கிறோம், குறிப்பாக இந்தக் காலத்தில் நாம் இத்தகைய சிரமங்களுக்கும் சுமைகளுக்கும் மத்தியில் இருக்கின்றோம். இந்த பரபரப்பான வாழ்க்கையில், யாராலும் மற்றவர்களின் சுமைகளை அதிகமாக அறியவோ அல்லது ஆறுதல்படுத்தவோ முடியாது. அப்படியானால், இந்தச் சுமைகளைக் இறக்கி வைக்க ஒரு இடம் வேண்டும். அதுவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நமக்காக நம் பாரங்களை சுமந்து நம்மை ஆறுதல்படுத்துபவர்.

அதுபோல மற்றொரு உண்மை இங்கே காணப்படுகிறது, அந்த பாரத்தையும் அல்லது சுமையையும் ஒரு நாளைக்கு மட்டும் தாங்கலாம் என்று கூறப்படவில்லை. 'நாள்தோறும்' அதாவது ஒவ்வொரு நாளும். இப்படி தினந்தோறும் நமக்கு உதவி செய்ய மற்ற யாரையாவது இந்த நெரிசல் வாழ்க்கையில் நமக்கு கிடைப்பார்களா?நம் கர்த்தர் நாள்தோறும் நம் பாரத்தை சுமக்க தயாராக நிற்கிறார், நாம் தினந்தோறும் அந்த இறைவனின் கரங்களில் நம் இதய பாரத்தை இறக்கி வைத்தால் மட்டும் போதும். இல்லை என்றால் அந்த பாரம் நம்மில் பலவித சிரமங்களை உருவாக்க விடும். ஒரு கழிவுத் தொட்டி தினமும் காலிச் செய்யாவிட்டால் அதில் இருந்து துர்கந்தம் வமிக்கும், அதுபோல நம் இதய பாரதத்தை இறக்கி வைக்கவில்லை என்றால் அது நம்மில் பல உடல்ரீதியான, மனநல சிரமங்களை உண்டாக்கும் என்பது ஒரு உண்மைதான். இந்த சந்தர்ப்பத்தில் நம்முடைய இந்த 'சுமை தாங்கி'யினுடைய சமூகம் நமக்கு எத்தனையோ நிம்மதியை தரும் ஒன்றாகும். அப்படியானால் ஏன் இப்படிபட்ட ஒரு ' சுமை தாங்கி' யை நம் வாழ்க்கைக்கு அழைக்க கூடாது! நம்முடைய எல்லா பாரங்களையும் சுமந்து தாங்கும் இந்த தேவனை நம் வாழ்க்கைக்கு அழைக்கலாம்! இந்த தேவனுக்காக நம் வாழ்க்கையை சமர்ப்பிக்கலாம்! அதற்காக இறைவன் நமக்கு உதவட்டும்!

இந்த கர்த்தரை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாத எவரேனும் இதைப் படித்துக் கொண்டிருந்தால், இந்த கர்த்தரை ஏற்றுக்கொண்டு அவருடைய மகனாகவும் மகளாகவும் மாற இன்றே முடிவு எடுங்கள், கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக! கர்த்தருடைய விலையேறப்பெற்ற நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக!

ஆமென்!


. Author ✍️ sis. Reny Saji

ചിന്ത

'

Psalms 68:19 "നമ്മുടെ രക്ഷയാകുന്ന ദൈവമായി, നാൾതോറും നമ്മുടെ ഭാരങ്ങളെ 'ചുമക്കുന്ന' കർത്താവു വാഴ്ത്തപ്പെടുമാറാകട്ടെ!"

പ്രിയരേ, ഭാരങ്ങളെ 'ചുമക്കുന്ന' ഒരു കർത്താവിനെക്കുറിച്ചു മുകളിൽ പറഞ്ഞിരിക്കുന്ന വചനത്തിൽ പറയുന്നു. നമ്മിൽ ആരെങ്കിലും വഹിക്കുവാൻ കഴിയാത്ത തരത്തിൽ ഭാരവുമായി നടക്കുന്നവരാണോ? എങ്കിൽ നമുക്ക് ചുമക്കുന്ന ഒരു 'ചുമടു താങ്ങി 'യായ കർത്താവുണ്ട്. നമ്മുടെ ചുമട് അഥവാ ഭാരത്തെ ചുമക്കുവാൻ അവിടുന്ന് മതിയായവനാണ്.

അതുകൊണ്ട് വചനത്തിൽ കൂടെ കർത്താവ് നമ്മോട് ആഹ്വനം ചെയ്യുന്നത് Matthew 11:28 "അദ്ധ്വാനിക്കുന്നവരും ഭാരം 'ചുമക്കുന്നവരും' ആയുള്ളോരേ, എല്ലാവരും എന്റെ അടുക്കൽ വരുവിൻ; ഞാൻ നിങ്ങളെ ആശ്വസിപ്പിക്കും." ഈ ലോക ജീവിതത്തിൽ ജീവിക്കുമ്പോൾ പലവിധമായ ഭാരങ്ങൾ നമ്മുക്ക് ഉണ്ട്, പ്രത്യേകിച്ചും ഈ വർത്തമാന കാലത്തിൽ നാം അങ്ങനെയുള്ള പ്രയാസങ്ങളുടെയും ഭാരങ്ങളുടെയും നടുവിലാണ്. ഈ തിരക്കേറിയ ജീവിതത്തിൽ ആർക്കും തന്നെ അധികമായി മറ്റുള്ളവരുടെ ഭാരങ്ങളെ അറിയുവാനോ ആശ്വസിപ്പിക്കുവാനോ കഴിയുന്നതല്ല. അപ്പോൾ നമുക്ക് ഈ ഭാരങ്ങളെ ഒന്ന് ഇറക്കിവയ്ക്കുവാൻ ഒരു ഇടം ആവശ്യമാണ്. അതാണ് നമ്മുടെ കർത്താവായ യേശുക്രിസ്തു. അവിടുന്ന് നമ്മുടെ ഭാരങ്ങളെ നമുക്കായ് ചുമന്ന് നമ്മെ ആശ്വസിപ്പിക്കുന്നവനാണ്.

അതുപോലെ മറ്റൊരു വസ്തുത ഇവിടെ കാണുന്നത്, ആ ഭാരം അഥവാ ചുമട് ഒരു ദിവസത്തേക്ക് മാത്രം വഹിക്കാം എന്നല്ല പറഞ്ഞിരിക്കുന്നത് ' നാൾതോറും' അതായത് ദിവസംതോറും. ഇങ്ങനെ ദിനംതോറും നമുക്ക് സഹായിപ്പാൻ മറ്റ് ആരെയെങ്കിലും ഈ തിരക്കേറിയ ജീവിതത്തിൽ ലഭിക്കുമോ?. നമ്മുടെ കർത്താവ് ദിവസംതോറും നമ്മുടെ ഭാരം ചുമക്കാൻ തയ്യാറായി നിൽക്കുകയാണ്, നാം ദിനംതോറും ആ കർത്താവിന്റെ കരങ്ങളിലേക്ക് നമ്മുടെ ഹൃദയ ഭാരത്തെ ഇറക്കി വച്ചാൽ മാത്രം മതി. അല്ല എങ്കിൽ ആ ഭാരം നമ്മിൽ പലവിധ പ്രയാസങ്ങൾ സൃഷ്ടിക്കാൻ സാധ്യതയുണ്ട്. ഒരു waste bin ദിനം തോറും empty ചെയ്യാതിരുന്നാൽ അതിൽ നിന്ന് ദുർഗന്ധം വമിക്കും, അതുപോലെ നമ്മുടെ ഹൃദയ ഭാരത്തെ ഇറക്കി വയ്ക്കാതിരുന്നാൽ അത് നമ്മിൽ പല ശാരീരിക മാനസിക പ്രയാസങ്ങൾ ഉളവാക്കും എന്നത് ഒരു യാഥാർഥ്യമാണ്. ഈ അവസരത്തിൽ നമ്മുടെ ഈ 'ചുമട് താങ്ങി' യുടെ സാന്നിധ്യം നമ്മുക്ക് എത്രയോ ആശ്വാസം തരുന്ന ഒന്നാണ്. എങ്കിൽ എന്തുകൊണ്ട് ഇങ്ങനെ ഒരു ' ചുമട് താങ്ങി' യെ നമ്മുടെ ജീവിതത്തിലേക്ക് ക്ഷണിച്ചു കൂടാ! നമ്മുടെ എല്ലാ ഭാരങ്ങളെയും ചുമക്കാൻ കഴിയുന്ന ചുമടു താങ്ങിയായ ഈ കർത്താവിനെ നമ്മുടെ ജീവിതത്തിലേക്ക് ക്ഷണിക്കാം! ഈ കർത്താവിനായി നമ്മുടെ ജീവിതത്തെ സമർപ്പിക്കാം! അതിനായി കർത്താവ് നമ്മെ സഹായിക്കട്ടെ!

ഈ കർത്താവിനെ രക്ഷകനായി സ്വികരിക്കാത്ത ആരെങ്കിലും ഇത് വായിക്കുന്നുണ്ടെങ്കിൽ ഇന്ന് തന്നെ ഒരു തീരുമാനം എടുക്കാം, ഈ കർത്താവിനെ സ്വികരിച്ചു അവിടുത്തെ മകനായി, മകളായി തീരാം, അതിനായി ദൈവം നിങ്ങളെ സഹായിക്കട്ടെ! കർത്താവിന്റെ വിലയേറിയ നാമം എന്നും എന്നേക്കും വാഴ്ത്തപ്പെടുമാറാകട്ടെ!

ആമേൻ !

✍️sis . Reny Saji

5 views0 comments

*சாராளின் வாழ்க்கையிலிருந்து சில பாடங்கள்*


ஆதியாகமம் 12: 1-5

1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.....

5 ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும்,... கூட்டிக்கொண்டு அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்திலே சேர்ந்தார்கள்.

உங்களால் நம்ப முடிகிறதா?! கர்த்தர் காட்டும் இடத்திற்குச் செல்லும்படி ஆபிரகாமிடம் சொன்னார். ஆபிரகாம் கர்த்தர் மேல் விசுவாசமும் நம்பிக்கையும் வைத்து, செல்ல ஆயத்தமானார்.

மேலும் சாராள் பற்றி என்ன? அந்த இடத்தின் பெயர் தெரியவில்லை, எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.. ஆனாலும், ஆபிரகாமுடன் செல்ல தயாராக இருந்தாள். சாராள் எவ்வளவு கீழ்ப்படிதலுள்ளவள் என்பதை இது காட்டுகிறது.

'கீழ்ப்படிதல்' - அதைத்தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஏதேன் தோட்டத்தில் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை முறித்தது கீழ்ப்படியாமை. கீழ்ப்படியாமையின் பாவமே நம்மை தேவனிடமிருந்து ஆவிக்குரிய நிலையிலும் சரீர பிரகாரமாகவும் பிரித்தது. கீழ்ப்படியாமைக்குக் காரணம் அவர்களின் அவிசுவாசமே.

கீழ்ப்படிவது மிகவும் முக்கியம், அதுவும் திரும்பக் கேள்வி கேட்காமல்.

- கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள் (அவருடைய கட்டளைகளுக்கு)

- பெரியவர்களுக்கு, பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்

சாராளின் கீழ்ப்படிதலுக்கு விசுவாசம் தேவைப்பட்டது. அவள் தன் கணவன் மீது நம்பிக்கை வைத்திருந்தாள், அதற்கு மேல் அவர்களை இதுவரை வழிநடத்திய தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தாள். அவள் அவரை நம்பினாள்.

* குறிப்புகள்:*

¶ *_கர்த்தருக்குக் கீழ்படிந்து_* அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுங்கள்

¶ *_உங்கள் பெற்றோர்/பெரியவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்_*

(முணுமுணுக்கவோ அல்லது திரும்பிப் பேசவோ கூடாது)

_*தேவனை நம்புங்கள்.*_ அவரை நம்புங்கள் .

உங்கள் அடுத்த அடியை எங்கு வைக்க வேண்டும் என்று நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், கர்த்தரிடம் கேளுங்கள். நீங்கள் அவரை நம்பினால், அவரை விசுவாசித்தால் அடுத்த படியை அவர் உங்களுக்குக் காட்டுவார்.

*இன்றைய தினத்திற்கான வேத பகுதி:*

📖 *எபேசியர் 6:1-3* 📖

1 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.

2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,

3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.

2 views0 comments
bottom of page