top of page

*சாராளின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்* 👩‍🦰

°•°•°•°•°•°•°•°•°•°°•°•°•°•°•°•°•°•°•°

★ ** ✨

சாராளைப் பற்றி வேதாகமத்தில் நாம் படிக்கும் முதல் விஷயம், அவள் ஆபிரகாமின் மனைவி, அவள் மலடி, அவளுக்கு குழந்தை இல்லை என்று தான்.(ஆதியாகமம் 11: 30)

அந்தக் காலத்தில், குழந்தைகளைப் பெற்றெடுப்பது ஒரு ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது, அதனால் மலடியான பெண்கள் ஆழ்ந்த அவமானத்தை அனுபவித்தனர். மலட்டுத்தன்மை என்பது மறைந்திருக்கும் பாவம் அல்லது குறைபாட்டின் விளைவு என்று மக்கள் நம்பினர்.

சாராளும் இந்த மன வலியையும் வேதனையையும் அனுபவித்திருப்பாள். அவள் மலடியாக இருந்ததால் தான் வெட்கத்தையும் அவமானத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது.

நம் வாழ்விலும் சில விஷயங்கள் அவமானம் அல்லது வேதனையை உண்டாக்கும். இவைகளுக்கு நமது செயல்கள் காரணமாக இருக்காது. பிறவியில் சிலர் பார்வையற்றவர்களாகவும், சிலர் உடல் ஊனமுற்றவர்களாகவும் பிறக்கிறார்கள். அப்படிப் பிறந்ததற்கு அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்று நீங்கள் பதில் தேடுகிறீர்களானால், சாராளின் வாழ்க்கையைப் பாருங்கள்.

சாராளின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, ​​அவளுடைய மலட்டுத்தன்மையை எவ்வாறு கர்த்தர் ஒரு ஆசீர்வாதமாக மாற்றினார் என்பதைக் காணலாம். அவள் ஈசாக்கைப் பெற்றெடுத்தபோது அவள் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதித்தார்.

(ஆதி 17: 16)

எனவே, கர்த்தரின் மகிமைக்காக கர்த்தர் இந்த சிறிய முட்களை நம் வாழ்வில் கொடுத்துள்ளார் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். நம் வாழ்வில் உள்ள ஒவ்வொரு பிரச்சனையையும் தேவன் அறிவார். நம்முடைய பலவீனங்களை அவர் அறிவார். ஆம், இறுதியில் அவற்றை ஆசீர்வாதங்களாக மாற்ற அவரால் முடியும்.

*குறிப்புக்கள்:*

¶ முணுமுணுப்பதை விடுத்து, *_நம்மிடம் உள்ளதை கர்த்தரின் மகிமைக்காக பயன்படுத்துவோம்._*

¶ தேவன் மீது *_நம்பிக்கை_* வைப்போம். எல்லாவற்றையும் நம் நன்மைக்காக மாற்றக்கூடியவர் அவர்.

*இன்றைய தினத்துக்கான வேத வசனம்:*

📖 *ரோமர் 8:28* 📖

_அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் *அன்புகூருகிறவர்களுக்குச்* சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்._

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Author: Sis. Shincy Susan

10 views0 comments

🛑സാറയുടെ ജീവിതത്തിൽ നിന്നു ചില പാഠങ്ങൾ:

വേദപുസ്തകത്തിൽ നിന്ന് നാം സാറയെ കുറിച്ച് പഠിക്കുമ്പോൾ നമ്മുക്ക് പ്രഥമമായി മനസ്സിലാക്കുവാൻ കഴിയുന്ന കാര്യം അവൾ അബ്രാഹാമിന്റെ ഭാര്യയായിരുന്നു എന്നതും കുട്ടികളില്ലാതെ മച്ചിയായിരുന്നു എന്നതുമാണ്.

അക്കാലങ്ങളിൽ ഒരു കുഞ്ഞിനെ പ്രസവിച്ച് മാതാവാകുക എന്നത് വളരെ വലിയ അനുഗ്രഹമായി കരുതപ്പെട്ടിരുന്നു. അതിനാൽ മച്ചി എന്ന അവസ്ഥ അനുഭവിച്ചിരുന്ന സ്ത്രീകൾ സമൂഹത്തിൽ ഒരു ലജ്ജാ വിഷയമായിരുന്നു. ഒരു സ്ത്രീ മച്ചിയായി തുടരുന്നതിന്റെ കാരണം അവളിലുള്ള മറഞ്ഞിരിക്കുന്ന പാപങ്ങളുടെയോ തെറ്റുകളുടെയോ അന്തരഫലം ആണെന്ന് ആളുകൾ വിശ്വസിച്ചിരുന്നു.

തത്തുല്യമായ വേദനയിലൂടെയും മാനസീക സംഘർഷങ്ങളിലൂടെയും സാറയും കടന്നു പോയി. മച്ചിയാണ് എന്ന ഒറ്റ കാരണത്താൽ അങ്ങേയറ്റം അപമാനവും നിന്ദയും അവൾക്ക് അനുഭവിക്കേണ്ടതായി വന്നു.

നമ്മുടെ ജീവിതങ്ങളിലും, ഇതേ വിധം നമ്മെ നിന്ദിതരും അപമാനിതരും ആക്കുന്ന ചില സംഗതികൾ ഉണ്ടായേക്കാം. എന്നാൽ അത് നമ്മുടെ ചെയ്തികളും പ്രവൃത്തികളും മുഖാന്തരം ആകണം എന്നില്ല. അന്ധരായി, വികലാംഗരായി, ബലഹീനരായി...... അങ്ങനെ പലവിധ ബാഹ്യമായ കുറവുകളോടെ ജനിക്കുന്നവർ ഉണ്ട്. അങ്ങനെ ജനിക്കുന്നതിനു പിന്നിൽ അവർക്കു യാതൊരു പങ്കും ഇല്ല. 'എന്തുകൊണ്ട് എന്റെ ജീവിതത്തിൽ ചില കാര്യങ്ങൾ ഈ വിധം ആയിരിക്കുന്നു?' എന്ന ചോദ്യം അലട്ടുന്നവരാണ് നിങ്ങൾ എങ്കിൽ സാറയുടെ ജീവിതം നിങ്ങൾക്ക് ഒരു തുറന്ന പുസ്തകമാണ്, വഴി കാട്ടിയാണ്.

സാറയുടെ ജീവിതത്തെ നാം ഉടനീളം ശ്രദ്ധിച്ചാൽ മച്ചിയായവൾ എന്ന് വിശേഷണത്തിൽ നിന്ന് എങ്ങനെ ദൈവം അവളെ അനുഗ്രഹീത എന്ന നാമവിശേഷണത്തിലേക്ക് കൊണ്ടു വന്നു എന്നു കാണാൻ കഴിയും. യിസ്ഹാക്കിനെ പ്രസവിച്ചതിലൂടെ ദൈവനാമം സാറയുടെ ജീവിതത്തിൽ മഹത്ത്വമെടുത്തു. അവൾ ജീവനുള്ള വർക്കെല്ലാം മാതാവായി. മാത്രമല്ല, അനേകം രാജാക്കന്മാർ അവളിൽ നിന്നും ഉത്ഭവിക്കപ്പെട്ടു. (ഉല്പത്തി 17:16)

ചില പ്രതികൂലങ്ങൾ, ചില മുള്ളുകൾ ദൈവം നമ്മുടെ ജീവിതത്തിൽ അനുവദിക്കുന്നത് അവിടുത്തിന്റെ നാമമഹത്തത്തിനായി ആണ് എന്ന് നാം എപ്പോഴും ഓർമ്മിക്കണം. നാം അനുഭവിക്കുന്ന ഓരോരോ പ്രശ്നങ്ങളും ദൈവം അറിയുന്നതാണ്. നമ്മുടെ ബലഹീനതകളെ അവിടുന്ന് അറിയുന്നു. തീർച്ചയായും അവയെ അനുഗ്രഹങ്ങളാക്കുവാൻ നമ്മുടെ ദൈവം കഴിവുള്ളവനാണ്.

❇️ ഒരു സംക്ഷിപ്ത വീക്ഷണം:

💠 പിറുപിറുക്കുന്നതിനു പകരം നമ്മുക്കുള്ളവയെ ദൈവനാമ മഹത്ത്വത്തിനായി എങ്ങനെ ഉപയോഗിക്കാം എന്ന് വിശകലനം ചെയ്യാം.

💠 ദൈവത്തിൽ പൂർണ്ണമായും വിശ്വാസം അർപ്പിക്കാം. എല്ലാം നന്മയ്ക്കായി വ്യാപരിപ്പിക്കുന്നവനാണ് അവിടുന്ന് .

📖 ഇന്നത്തെ വേദഭാഗം📖

🔹റോമർ 8:28🔹

എന്നാൽ ദൈവത്തെ സ്നേഹിക്കുന്നവർക്ക്, നിർണയ പ്രകാരം വിളിക്കപ്പെട്ടവർക്കു തന്നെ, സകലവും നന്മയ്ക്കായി കൂടി വ്യാപരിക്കുന്നു എന്നു നാം അറിയുന്നു.

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Author: Sis. Shincy Susan

17 views0 comments

ஒரு சிந்தனை

" "

யோவான் 15:2 (“என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.”)

நம்மை "சுத்தம் பண்ண" ஒப்பு கொடுத்திருக்கிறோமா?

அன்பானவர்களே! " சுத்தம் செய்தல்" என்பது வேதனையானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு கிளையை வெட்டினால், மரம் நிச்சயமாக வேதனைப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுத்தம் செய்ய வெட்டப்படுவது ஒரு காயத்தை உண்டாக்கும். காயம் ஏற்படும் போது நமக்கு வலி உண்டாகும், ரத்தம் மற்றும் பலவற்றை இழக்கிறோம். இந்த மாதிரியான சுத்தம் செய்வதற்காக வெட்டப்படுவதை நம் வாழ்வோடு தொடர்புபடுத்தி பார்த்தால், நம் வாழ்வில் சில வலிகளும் இழப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லையா! அது எப்பொழுதும் நமக்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஏனென்றால், ஒரு விவசாயி அல்லது தோட்டக்காரன் தான் நட்ட மரம் காய்க்கும் என்று எதிர்பார்ப்பவர். மேலும் வேத வசனம் கூறுகிறது, "கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்". ஆனால் அவர் கனி கொடுக்கும் மரத்தை தான் சுத்தம் செய்கிறார், ஏனென்றால் அது அதிக பலனைத் தரும். ஆகவே, நம் வாழ்வில் கர்த்தர் சில ' சுத்தம் செய்தல்' அல்லது வலியின் அனுபவங்களை அனுமதிக்கிறார் என்றால், இதனால் நாம் விவசாயி விரும்பும் விதத்தில் அதிக பலனைக் கொடுக்கவேண்டும். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், தோட்டக்காரருக்கு நாம் கனி கொடுப்பவர்கள் என்பதில் நல்ல நம்பிக்கை இருக்கிறது. அதற்காகத்தான் நம்மை சுத்தம் செய்கிறார். மேலும் கனிக்கொடுக்காதவை அகற்றப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. இவ்வாறு கர்த்தர் நம்மை நீக்கி விடாமல், நம் வாழ்வில் சில சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுமதிக்கும் போது, நாம் சோர்ந்து போகாமல், "ஆண்டவரே நான் கனி கொடுப்பவன் என்று என்மேல் உமக்கு நம்பிக்கை உள்ளதினால் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்" என்று சொல்லிக் கொண்டு நாம் கர்த்தரை துதித்து, நம்முடைய கஷ்டங்களிலும் பாட்டு பாட ஆண்டவர் நமக்கு கிருபை செய்வாராக! இப்படிப்பட்ட " சுத்தம் செய்தல்" மூலம் நாம் கர்த்தருக்கு அதிக கனி கொடுக்கிறவர்கள் ஆக கர்த்தர் நமக்கு மேலும் மேலும் உதவி செய்வாராக! வரும் நாட்களில் இந்த சிந்தனை உங்கள் இதயங்களில் ஆழமாக வேலை செய்ய கர்த்தர் அருள் புரிவாராக!

தேவ நாமம் மகிமை படுவதாக ! ஆமென்!

Author ✍️ Sis.Reny Saji

3 views0 comments
bottom of page