top of page

WE WILL RISE AGAIN !! 😃

A few days back, the world celebrated the resurrection day by commemorating the resurrection of Jesus Christ. As we rejoice in His victory over death, do you realize that this triumph holds the promise of our own resurrection?

Jesus Christ rose again and yes, we will also rise again!

Death, a consequence of sin, doesn't end our existence; rather, every human being will live eternally, either in heaven where you will have eternal life and eternal joy OR in hell where you'll have eternal punishment and everlasting suffering.

Scripture tells us, If you declare with your mouth, 'Jesus is Lord,' and believe in your heart that God raised Him from the dead, you will be saved (Romans 10:9) i.e, saved from the eternal punishment in hell.

Jesus Himself proclaimed, "I am the resurrection and the life. The one who believes in me will live, even though they die; and whoever lives by believing in me will never die" (i.e, second death/eternal punishment in hell) (John 11:25-26).

For God so loved the world that He gave His one and only Son, that whoever believes in Him shall not perish but have eternal life (John 3:16).

All these verses clearly tell what we have to do to have an everlasting life and to be saved from the penalty of sin.

Jesus Christ died on the cross for you and me, paving the way for our redemption. And His resurrection ensures our hope of rising again to join Him in heaven.

But the choice is yours. God has given us freewill. Do you want to rise again to be with Christ in heaven or in hell where there is suffering? Will you embrace the love and salvation offered by Jesus Christ?

The choice, is yours...



Written by ✍️: Sis Shincy Susan

Mission sagacity Volunteers

26 views0 comments

மிஷனரி வரலாறு

ரெனார்ட் போன்கே

பிறப்பு : 1940

இறப்பு : 7 -12 -2019

பிறந்த இடம் : ஜெர்மனி

தரிசன இடம் : ஆப்பிரிக்கா

ஒரு 9 வயது சிறுவனின் தாய் அவனிடம் அவன் செய்த பாவம் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார். 10 வயதில், ஆப்பிரிக்காவில் மிஷனரி பணிக்கான கர்த்தரின் அழைப்பைப் புரிந்துகொண்டார். இந்த சிறுவன் பின்னர் அந்த அழைப்பிற்கு கீழ்ப்படிந்து, பின்னர் அவர் ஆப்பிரிக்காவின் பில்லி கிரஹாம் என்று அறியப்பட்டார். அவர் பெயர் ரெனார்ட் போன்கே. அவர் ஒரு சிறிய கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள ஒரு உள்ளூர் சபையில் ஊழியம் செய்தார். 'நரகத்தைக் கொள்ளையடித்து, சொர்க்கத்தைப் பிரபலமாக்குவோம்' என்ற முழக்கத்துடன் தனது ஊழியத்தைத் தொடங்கினார். அப்போது அங்கு கடுமையான வேலை பற்றாக்குறை ஏற்பட்டு குற்றங்கள் அதிகரித்தன. எனவே, அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க இளைஞர்களைப் பயன்படுத்தினார். கட்டிடங்கள் கட்டுவது அவரது விருப்பமாக இருந்தது, விசுவாசத்தால் கூட்டங்களை நடத்த பெரிய இடங்கள் வாடகைக்கு விடப்பட்டன.

ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்தது, ஆனால் மிக விரைவில் எழுந்த எழுப்புதல் நெருப்பானது, தென்னாப்பிரிக்காவில் பரவி, தேவன் அவருடைய வாயை கட்டுப்படுத்தி மற்றும் பரிசுத்த ஆவியானவரானவர் ஆறுதல், வழிகாட்டி மற்றும் வலிமையின் ஆதாரமாகவும் செயல்பட்டார். நாம் இயேசு கிறிஸ்துவின் மகத்தான கட்டளையை நிறைவேற்ற இரவும் பகலும் முயற்சி செய்கிறோமா? இல்லையென்றால், இந்தக் கதை உங்களுக்குள் பரலோக நெருப்பைப் பரப்பட்டும். அவர் எரியும் நெருப்பாகவும், அணையாத உற்சாகமாகவும் இருந்த தேவனுடைய வார்த்தைகளால் ஹைஸ்கூல் ஆல் நேஷன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கி 9 நாடுகளில் பணியாற்றத் தயாராகிவிட்டார். ஆயிரக்கணக்கானவர்களை கர்த்தருக்குள் வழி நடத்தின மாபெரும் மிஷனரி 79 வயதில் தனது பரலோக வீட்டிற்குச் சென்றார்.

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை உங்களை ஊக்குவிக்கட்டும்.



Missionary story

Reynard Bonnke

Written by Bro. Lijoice c Jose Uk

Translation: Tephilla Mathew

Mission sagacity Volunteers

Tamil version

19 views0 comments

பல மிஷனரி ஊழியங்களில் ஈடுபட்டு, சுவிசேஷத்தைப் பரப்புவதில் தனது உணர்ச்சிப்பூர்வமான பிரசங்கத்தாலும், அயராத அர்ப்பணிப்பாலும் எண்ணற்ற உயிர்களைத் தொட்ட ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தேவ மனிதர் தான் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல அமெரிக்க சுவிசேஷகர் டி. எல். மூடி. அவர்கள்.

அவர் பிப்ரவரி 5, 1835 ல் மாசச்சுசெட்ஸ், நார்த்ஃபீல்டில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்த அவரையும் உடன்பிறந்தவர்களையும், அவர்களது தாய் மிகவும் கஷ்டப்பட்டு தான் வளர்த்தார். தனது பதினேழாம் வயதில் பாஸ்டனில் உள்ள தனது மாமாவுடன் சென்றது மூடியின் வாழ்க்கையில் ஆவிக்குரிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது. மூடியின் மாமா ஒரு செருப்புத் தொழிலாளி, செருப்புக் கடை நடத்தி வந்தார். அவருடைய மாமா அவரை ஞாயிறு பாடசாலைக்கு அனுப்பினார். மூடியும் மகிழ்ச்சியோடே அதில் பங்கெடுத்தார். அங்கு எட்வர்ட் கிம்பல் என்ற ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு நாள், துல்லியமாக சொன்னால், ஏப்ரல் 25, 1855 ல், மூடியைப் பார்க்க எட்வர்ட் அவர்கள் அந்த கடைக்கு வந்தார். அந்த சந்திப்பு மூடியின் இரட்சிப்புக்கு வழிவகுத்தது. அவர் கர்த்தரை இரட்சகராக ஏற்றுக்கொண்டார். (17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எட்வர்ட் கிம்பலின் மகனை இரட்சிப்புக்குள் வழி நடத்தினது மூடி தான் என்றும் வரலாற்று புத்தகங்கள் கூறுகின்றன.) மூடி தனது மறுபிறப்புக்குப் பிறகு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஒரு மாதம் கழித்து அவர் மவுண்ட் வெர்மான்ட் தேவாலயத்தில் உறுப்பினராக விண்ணப்பித்தார். ஆனால், கமிட்டியின் கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளிக்க முடியாமல் மூடி தனது உறுப்பினர் பதவியை இழந்ததாகவும், பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மூடி தனது உறுப்பினர் பதவியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு 19 வயது இருக்கும் போது, மூடி ஒரு கடின உழைப்பாளியான இளைஞராகவும், வளரும் வாலிப கிறிஸ்தவராகவும் இருந்தார். அந்த வயதில் அவருக்கு வடக்கு வெல்ஸ் தெருவில் உள்ள ஞாயிறு பள்ளி வகுப்பில் பாடம் நடத்த வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதற்கு மூடி கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான ஆசிரியர்கள் இருப்பதாக கண்காணிப்பாளரிடம் இருந்து பதில் வந்தது. ஆனால் மூடி தன் ஆசையை கைவிட தயாராக இல்லை. சொந்தமாக ஒரு ஞாயிறு பள்ளி வகுப்பைத் தொடங்க முடிவு செய்தார். அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 18 குழந்தைகளுடன் மூடி அவர்கள் தேவாலயத்திற்கு வந்தார். அந்த நாளை தனது வாழ்வின் மகிழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை என்று அவர் விவரிக்கிறார். 1859 ல், குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்தது. 1860 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் மூடியின் ஞாயிறு பள்ளியை பார்வையிட்டார். ஆனால் 1859 ல் மூடி ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொண்டார். இந்த அனுபவம் அவருடைய எதிர்கால சுவிசேஷப் பணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அந்நாட்களில் மூடியின் ஆசிரியர் ஒருவர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மரணத்திற்கு சமீபமாக இருந்தார். இந்த ஆசிரியர் இறப்பதற்கு முன் நிறைவேற்ற விரும்பின ஒரு கடைசி ஆசையை இருந்தது. அவர் இறப்பதற்கு முன், தனது மாணவர்கள் அனைவரும் கர்த்தரை விசுவாசித்து இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் தனது நோயால் மிகவும் சோர்வடைந்தார், எல்லா குழந்தைகளையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசுவதற்கு அவருக்கு வலிமையோ ஆரோக்கியமோ இல்லை. ஆனால் மூடி அவருக்கு உதவினார். மூடி அனைத்து குழந்தைகளையும் அவர்களது வீடுகளில் சந்தித்து அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க அவருடன் கூட சென்றார். 10 நாட்களுக்கு பிறகு வீடுசந்திப்பு ஊழிய முயற்சியில் வெற்றி கண்டார்கள். அவர்களால் அந்தப் பிள்ளைகள் அனைவரையும் இரட்சிப்புக்கு நேராக வழிநடத்த முடிந்தது. இறுதியாக, ஆசிரியர் விடைபெற்று தனது தாய் வீட்டிற்குத் திரும்பும்போது, இந்தக் குழந்தைகள் அனைவரும் அவரைப் வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். இந்த அனுபவம் மூடி அவர்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்வு பல ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் கொண்டு வர தூண்டுதலாக இருந்தது.

லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தொழிலதிபராகத் தொடர்வது உண்மையில் நஷ்டம் என்பதை உணர்ந்த மூடி, ஆத்துமாக்களை வெல்வதே கர்த்தர் விரும்புகிற ஒரே தொழில் என்பதை உணர்ந்த மூடி, கர்த்தரின் கடின உழைப்பாளியாக மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகள் நம்மை ஊக்கப்படுத்துவதாக.



Written by ✍️; Sis Jancy Rojan varghese

Translation by; Sis Tephila Mathew

Mission sagacity Volunteers


32 views0 comments
bottom of page