top of page
Writer's pictureroshin rajan

சாராள், கீழ்ப்படிதலுள்ள மனைவி - பகுதி 2

சாராளின் வாழ்க்கையிலிருந்து சில பாடங்கள் 👩‍🦰

°•°•°•°•°•°•°•°•°•°°•°•°•°•°•°•°•°•°•°

ஆதியாகமம் 12: 10 - 20

_10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். 11 அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். 12 எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். 13 ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான். 14 ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள். 15 பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.16 அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.

17 ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.

18 அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?

19 இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.

20 பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்._

சாராள் அழகாக இருந்ததாலும், அவளால் அவன் கஷ்டப்படுவதை விரும்பாததாலும் அவள் தன் சகோதரி என்று மற்றவர்களிடம் சொல்லும்படி அப்ராம் கேட்பதை இங்கே காண்கிறோம். அவள் நம்பி வந்த தன் சொந்தக் கணவனே இப்படிச் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தபோது சாராளுக்கு இந்தக் கோரிக்கை மனதைக் கனக்கச் செய்திருக்க வேண்டும்! இருப்பினும், பார்வோனின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படலாம் என்று தெரிந்திருந்தும், சாராள் பணிவுடன் கீழ்ப்படிந்தாள்.

ஆனால் தேவன் அவளை எவ்வாறு பாதுகாத்தார் என்பதை அடுத்த வசனங்களில் படிக்கிறோம். நம் சொந்த வாழ்வில், நம் அன்புக்குரியவர்கள் அல்லது அன்பானவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக நம்மைக் கைவிடும் சூழ்நிலைகள் இருக்கலாம் என்பதை நினைவூட்டுவதாக இந்த சம்பவம் இருக்கிறது. இருப்பினும், நாம் கர்த்தரில் நம்பிக்கை வைத்து, அவரைச் சார்ந்திருந்தால், அவர் நம்மைக் காப்பார் என்பதை எப்போதும் நினைவில் கொள்வது அவசியம். அவர் நம்மை விட்டு விலக மாட்டார், கைவிடமாட்டார், நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத வழிகளில் அவர் நம்மை விடுவிப்பார்.

குறிப்பு:

¶ கீழ்ப்படிதலுடன் இருங்கள்

¶ உங்கள் நண்பர்கள் அல்லது அன்பானவர்கள் உங்களை தனியாக விட்டுவிட்டால் சோர்வடைய வேண்டாம். உங்களை ஒருபோதும் கைவிடாத அல்லது கைவிடாத கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.

¶ உங்கள் விடுதலைக்காக தேவனை நம்பி அவரை சார்ந்திருங்கள்.

இன்றைய தினத்துக்கான வசனங்கள்:

📖 உபாகமம் 31:8 📖

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்.

📖 1 பேதுரு 5:7 📖

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Author : Sis. Shincy Susan

Transilator: Sis. Tephilla Mathew

5 views0 comments

Recent Posts

See All

Special Thoughts

✨ *Encouraging thoughts* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°• ★ *Lessons from the life of Joseph - 7* *_Are you ready to sacrifice?_*...

Special Thoughts

✨ *പ്രോത്സാഹജനകമായ ചിന്തകൾ* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°•°• *★ യോസേഫിൻ്റെ ജീവിതത്തിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ - 6* *_ദൈവത്തിൻ്റെ...

SPECIAL THOUGHTS

✨ *Encouraging thoughts* 😁 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°••°•°• *★ Lessons from the life of Joseph - 6* *_The power of understanding...

Commentaires


bottom of page